இதுவும் அது. (இ-ள்) வளி என வரும் பூதக்கிளவியும் அ இயல் நிலையல் செவ்விது என்ப - வளி என்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத1 ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணர நின்ற சொல்லும் மேற்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று சொல்லுவர் புலவர். எ - டு : வளியத்துக் கொண்டான் , வளியிற் கொண்டான் ; சென்றான் , தந்தான் , போயினான் என வரும் . 'செவ்விது' என்றதனால் , இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (40)
1. இடக்கர் என்றது மலவாய்க் காற்றை . [பாவாணர்]
|