3. இகர ஈறு

`புளி' என்னும் மரப்பெயர்

245.புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.

இஃது, இவ்வீற்று மரப்பெயர் ஒன்றற்கு மேல் எய்திய வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதித்தல் நுதலிற்று.

(இ-ள்) புளிமரக்கிளவிக்கு சாரியை அம்-புளி என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச்சாரியை.

எ - டு : புளியங்கோடு , செதிள், தோல், பூ என வரும் .

சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியவதனால் , அம்முப்பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.

(42)