இஃது, இவ்வீற்றில் சிலவற்றிற்குச் செய்யுள் எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ழகர உகரம் நீடு இடன் உடைத்து-இவ்வீற்று மொழிகளுள் ழகரத்தொடு கூடிய உகரவீற்றுமொழி அவ் வுகரம் ஊகாரமாய் நீண்டு முடியும் இடன் உடைத்து ; ஆவயின் உகரம் வருதல்-அவ்விடத்து உகரம் வந்து முடிக. ` இடனுடைத்து ' என்றதனான் இது செய்யுளிடத்தெனக் கொள்க. எ - டு : "பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி" என வரும். (59)
|