இஃது, இவ்வீற்று மரப்பெயருள ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஒடு மரக்கிளவி உதிமர இயற்று-ஒடு என்னும் மரத்தினை உணரநின்ற சொல் உதி என்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும். எ - டு : ஒடுங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (60)
|