இஃது, அவ்வீற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும்- மாறுபாடுகோடலையுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும் வினாப் பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும் எண்ணுப்பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்- மேற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும். எ - டு : யானே கொண்டேன்; சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்; நீயே கொண்டாய்; சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்; கொற்றனே, சாத்தனே, தேவனே, பூதனே எனவும் வரும். `கூறிய' என்றதனால், பிரிநிலைப் பொருண்மைக்கண்ணும் ஈற்றசைக்கண்ணும் வரும் ஏகாரங்களின் இயல்பு முடிபு கொள்க. அவனே கொண்டான் என்பது பிரிநிலை, `கடலே பாடெழுந்தொலிக்கும்' என்பது ஈற்றசை. (73)
1. (பாடம்) மாறுகோள். (நச்.)
|