இஃது, எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்) இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும் - ஓகார வீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும். எ - டு : கோயில் என வரும். நிலைமொழி ஒகரவெழுத்துப்பேறும் வரையாது கூறினவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதனாற் பெற்றாம். கோ வென்றது உயர்திணைப் பெயரன்றோவெனின் கோவந்ததென அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டது போலும்.1 (91)
1. அஃறிணைப்பாற் படுதலாவது சொல்லால் அஃறிணையாயும் பொருளால் உயர்திணையாயுமிருத்தல். (பாவாணர்.)
|