1. மெல்லொற்று ஈறுகள்

அதற்குமேலும் ஒரு முடிபு

298.ஞநமவ இயையினும் உகர நிலையும்.

இஃது, அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத்தோடும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஞநமவ இயையினும் உகரம் நிலையும்-அந்த ஞகரவீறு வன்கணமன்றி ஞநமவ முதன்மொழி வருமொழியாய் இயையினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும்.

எ - டு : உரிஞுஞான்றது ; நீண்டது , மாண்டது எனவும் ; உரிஞுஞாற்சி ; நீட்சி , மாட்சி எனவும் ; உரிஞுவலிது , வலிமை எனவும் வரும்.

இடைக்கணத்து யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகை மரபினுள் "உகரமொடு புணரும் புள்ளியிறுதி" (சூத் - 21) என்பதனுட் கூறப்பட்டது.

(2)