இஃது, அந்நகரவீற்று ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) வெரிந்1என் இறுதி முழுதும் கெடுவழி - வெரிந் என்று சொல்லப்பட்ட நகரவீற்று மொழி தன் ஈற்று நகரம் முன்பெற்ற அகரத்தோடு எஞ்சாமற் கெட்டவிடத்து , மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்துமுடியும் இடனுடைத்து . எ - டு : வெரிங்குறை ; செய்கை , தலை , புறம் என வரும். (5)
1."வெயில் வெரி நிறுத்த .... இட்டெழுதுப" (அகம் - 37) என்பது நனண என்னும் மூன்று இனவெழுத்துக்களுள் முதலதே முந்தினது என்பதை உணர்த்தும் . (பாவாணர்)
|