இது, மேல் முடிபுகூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்றுமைக் கண் வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் அக்கு என் சாரியை தோற்றம் வேண்டும் - இறுதி உரும் ஒழிந்த இரண்டும் அக்கு என்னும் சாரியை தோற்றி முடிதல் வேண்டும். `தோற்றம்' என்றதனான் உகரம் நீக்குதல் வேண்டுமென்க. எ - டு : ஈமக்குடம், கம்மக்குடம்; சாடி, தூதை, பானை என வரும். மேல் வேற்றுமை கூறிய முடிபு குணவேற்றுமைக்கண்ணதென்றும், ஈண்டுக் கூறிய முடிபு பெருட்பெயர்க்கண்ணதென்றும் கொள்க. (34)
|