இதுவும் அது . (இ-ள்) ஏனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மரமல்லா எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும் ; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்விடத்து வருமொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும் . எ - டு : எகினக்கால் ; செவி , தலை , புறம் என வரும் . மேலைச்சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான் , இயல்பு கணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க . எகினஞாற்சி ; யாப்பு , அடைவு என வரும் . `இயற்கை' என்றதனான் , அகரப்பேற்றோடு மெல்லெழுத்துப் பேறும் கொள்க. எகினங்கால் ; செவி , தலை , புறம் என வரும். (42)
1.உயிரி -பிராணி.
|