1. மெல்லொற்று ஈறுகள்

இதற்கு வேறொரு முடிபு

350.சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்.

இஃது , எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று .

(இ-ள்) சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ்வியற்பெயர் பண்படுத்து வருவழி முன்கூறிய இருமொழிச் செய்கையும் தவிர்ந்து இயல்பாய் முடியும்.

எ - டு : பெருஞ்சாத்தன்றந்தை , பெருங்கொற்றன்றந்தை என வரும்.

(54)