இஃது , மேலதற்கு வேறு ஓர் வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது . (இ-ள்) அ பெயர் மக்கள் முறை தொகூஉம் மருங்கின் ஆன மெய் ஒழித்து அன்கெடு வழி - அவ்வியற் பெயர் மக்கள் என்னும் முறைப்பெயர் வந்து கூடும் இடத்தின் கண்ணும் பிறிதிடத்தும் தான் ஏறிய மெய்யை ஒழித்து அன்கெடும் அவ்வழி அம் என்சாரியை நிற்றலும் உரித்து - அம் என்னும் சாரியை நிற்றலும் உரித்து . எ - டு : சாத்தங்கொற்றன் , கொற்றங்கொற்றன் எனவும் , சாத்தங்குடி , கொற்றங்குடி எனவும் வரும் . (55)
|