இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தாய் என் கிளவி இயற்கையாகும் - தாய் என்னும் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். எ - டு : தாய்கை;செவி, தலை , புறம் என வரும். இவ்வியல்பு மேல் இன்னவழி மிகும் என்கின்றமையின், அஃறிணை விரவுப்பெயர் என்பதனுள் அடங்காதாயிற்று. (63)
|