இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று. நெட்டெழுத்து இம்பரும்- நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும்-தொடர் மொழியது இறுதியினும், குற்றியலுகரம் வல்லாறுஊர்ந்து (நிற்றல் வேண்டும்)- குற்றிய லுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து (நிற்றலை வேண்டும் ஆசிரியன்.) "தந்து புணர்ந்துரைத்தல்"(மரபு-110) என்னும் தந்திரவுத்தியான், முன்னின்ற `நிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது. எ - டு: நாகு, வரகு என வரும். நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம், வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று. (3)
|