இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஆரும் வெதிரும் சாரும் பீரும் - ஆர் என்னும் சொல்லும், வெதிர் என்னும் சொல்லும் சார் என்னும் சொல்லும், பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்கு முடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும். எ - டு : ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கோடு; செதிள், தோல் , பூ என வரும். 'மெய்பெற' என்றதனான், பிறவும் மெல்லெழுத்து மிகுதல் கொள்க. குதிர்ங்கோடு,துவர்ங்கோடு; செதிள்,தோல், பூ என வரும். இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப் பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும் கொள்க. (68)
|