இஃது, அவ்வீற்று மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும் -அவ்வீறு மென்கணம் வந்து இயையின் லகாரம் னகாரமாய்த் திரிந்து முடியும்.எ - டு : கன்ஞெரி, நுனி , முறி என வரும். இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க. கன்ஞெரிந்தது; நீண்டது, மாண்டது என வரும். (72)
|