இஃது, மேலதனுள் ஒரு கூற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தகரம் வரும் வழி - அவ்வாறு றகாரமாய்த் திரிந்த லகாரம் தகரமுதல்மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையலும் புகர் இன்று என்மனார் புலவர் - அவ்வாறு றகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த் திரிந்து நிற்றலும் குற்றமின்றென்று சொல்லுவர் ஆசிரியர். எ - டு : கஃறீது, கற்றீது என வரும். `புகரின்று' என்றதனால், `நெடியத னிறுதி' (சூத் - 75) என்பதனுள், வேறீது, வேற்றீது என்னும் உறழ்ச்சிமுடிபுங் கொள்க. (74)
|