இஃது, இவ்வீற்று அவ்வழியுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்- நெல் என்னும் சொல்லும் செல் என்னும் சொல்லும் கொல் என்னும் சொல்லும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இவை நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல - அல்வழியைச் சொல்லுமிடத்தும் தம் வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். எ - டு : நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது,தீது, பெரிது என வரும். (76)
|