இஃது, மேலனவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஏனவை புணரின் இயல்பு என மொழிப.-அச்சுட்டு முதலாகிய வகரவீறு ஒழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் அவ்வகரம் திரியாது இயல்பாய் முடியும். எ - டு : அவ்யாழ் , இவ்யாழ் , உவ்யாழ் ,வட்டு, அடை , ஆடை என ஒட்டுக. (86)
|