1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு
ஆய்தம் புணர் மொழியுள்ளும் வருமாறு
இஃது, அவ்வாய்தம் புணர் மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.
ஈறு இயல் மருங்கினும்- நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும், இசைமை தோன்றும்- ஆய்த ஒலி தோன்றும்.
எ - டு: கஃறீது, முஃடீது என வரும். ஈண்டும் இடங்கள் அவை.