இஃது , மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது . (இ-ள்) மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும் - (ளகார ஈறு ) மெல்லெழுத்து (வருமொழியாய் வந்து ) இயையின் ணகாரமாய்(த் திரிந்து) முடியும் . எ - டு : முண்ஞெரி ; நுனி,முறி என வரும். இதனை வேற்றுமை இறுதிக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தலின், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. முண்ஞெரித்தது; நீண்டது, மாண்டது என வரும். (102)
|