நூன்மரபு

2. மாத்திரை

இரண்டு மாத்திரையுடைய நெட்டுயிர்

4.ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னும் அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

இதுவும் அது.

ஆ- ஈ - ஊ - ஏ - ஐ - ஓ - ஒள என்னும் அப்பால் ஏழும் - ஆ - ஈ - ஊ - ஏ - ஐ - ஓ - ஒள என்று சொல்லப்படுகின்ற அக் கூற்று ஏழும், ஈர் அளபு இசைக்கும் - (ஒரோவொன்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும், நெட்டெழுத்து என்ப - (அவைதாம்) நெட்டெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்).

ஐகார ஒளகாரங்களுக்கு இனம் இல்லையெனினும், மாத்திரையொப்புமையான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன.

(4)