1. குற்றியலுகரத்தின் இயல்பு

இருவழியிலும் குற்றுகரம் வருமாறு

409.அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகர நிறையும்1.

இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.

(இ-ள்) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும்.

எ - டு : நாகு கடிது, நாகு கடுமை , வரகு கடிது , வரகு கடுமை என வரும்.

(3)