3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

சில மென்றொடர் மொழிகள்

419.ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்
அக்கிளை மொழியும் உளவென மொழிப.

இஃது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதலும் எய்தியதன் மேல் சிறப்பும் கூறுகின்றது.

(இ-ள்) ஒற்று நிலை திரியாது அக்கொடு வரும் அ கிளை மொழியும் உள என மொழிப - ஒற்று (முன் நின்ற) நிலை திரியாது அக்குச்சாரியையோடு(ம் பிற சாரியையோடும்) வரும் அக்கிளையெழுத்து மொழியும் உள என்று சொல்லுவர்.(ஆசிரியர்)

(ஆசிரியர்.)

எ - டு : குன்றக்கூகை, மன்ற பெண்ணை என வரும்.

`உம்' மையால், கொங்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப்பெற்றன.

`நிலை' என்றதனான், ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து விலக்குக.

`அக்கிளைமொழி' என்றதனால், பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச்சேரி என அன்னும் அக்கும் வந்தன கொள்க.

(13)