4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி

அல்வழியில் அதற்கு மேலும் ஒரு முடிபு

425.ஏனைமுன் வரினே தானிலை யின்றே.

இஃது, மேலனவற்றிற்குப் பிறகணத்தோடு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏனை முன்வரின் தான் நிலையின்று - (அச் சுட்டுமுதல் உகர ஈறு உயிர்க்கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரின் அவ் ஆய்தம் நிலையின்றி முடியும்.

எ - டு : அது கடிது, இது கடிது, உது கடிது, சிறிது, தீது; பெரிது, ஞான்றது,நீண்டது, மாண்டது; யாது, தீது, வலிது என வரும்.

(19)