இஃது, மேலவற்றுள் ஒன்றன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) யா வினா மொழி இயல்பும் ஆகும் - (அவற்றுள்) யா வினா மொழி (மேற்கூறிய விகாரமேயன்றி) இயல்பாயும் முடியும். எ - டு : யாங்கு1 கொண்டான்; சென்றான்,தந்தான்,போயினான் என வரும். (23) 1.யாங்கு - எப்படி
|