இஃது, மேல் இன் பெறாதென்று விலக்கிய அதற்குப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் - பத்து என்னும் சொல்லில் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்றுவந்து இரட்டுதல், ஒத்தது என்ப - பொருந்திற்று என்று சொல்லுவர் (புலவர்) , இரண்டு வரு காலை - இரண்டு என்னும் எண் வரும் காலத்து. எ - டு : பன்னிரண்டு என வரும். (29)
|