இதுவும் அது. மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் -மூன்று என்னும் எண்ணும் ஆறு என்னும் எண்ணும் நெடு முதல் குறுகி முடியும், மூன்றன் ஒற்று பகாரம் ஆகும் - மூன்று என்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று பகர ஒற்றாய் முடியும். எ - டு :முப்பஃது (அறுபஃது) என வரும். (35) 1.இதனை இரண்டு நூற்பாவாகக்கொள்வர் நச்சினார்க்கினியர்.
|