5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஐந்து' என்னும் சொல்

443.ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்.

இதுவும் அது.

ஐந்தன் ஒற்று மகாரம் ஆகும் - ஐந்து என்னும் எண்ணின்கண் நின்ற நகார ஒற்று மகார ஒற்றாய் முடியும்.

எ - டு : ஐம்பஃது என வரும்.

ஆறன் நெடுமுதல் குறுகியவாறே நின்று அறுபஃது என வரும்.`ஏழு' குற்றகர ஈறு அன்றாம்.

(37)