5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `மூன்று' என்னும் சொல்

461.மூன்ற னொற்றே நகாரம் ஆகும்.

இஃது, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

மூன்றன் ஒற்று நகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று நகர ஒற்றாகும்.

எ - டு : முந்நூறு என வரும்.

(55)