5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அதன்கண் `நான்கு' `ஐந்து'

462.நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா.

இதுவும் அது.

நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா - நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணும் தம் ஒற்றுக்கள் நிலை திரியாது முடியும்.

எ - டு : நானூறு , ஐந்நூறு என வரும்.

`மெய்' என்றதனால் , நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்க. இன்னும் அதனானே, ஒற்றின்றி ஐநூறு என வரும் முடிபும் கொள்க.

(56)