5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்று' `இரண்டு' முன் ஆயிரம்

464.ஆயிரக் கிளவி வரூஉங் காலை
முதலீ ரெண்ணின் உகரங் கெடுமே.

இஃது , அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன் ஆயிரம் என்பது வருங்கால் முடிபு கூறுகின்றது.

ஆயிரக்கிளவி வரும் காலை முதல் ஈர் எண்ணின் உகரம் கெடும் - ஆயிரம் என்னும் சொல் (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன் வருங்காலத்து முதல் ஈர் எண்ணின்கண் பெற்று நின்ற உகரம் கெட்டு முடியும்.

எ - டு : ஓராயிரம் , இராயிரம் என வரும்.

(58)