5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`மூன்று' முன் ஆயிரம்

466.மூன்ற னொற்றே வகாரம் ஆகும்.

இதுவும், மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறதல் நுதலிற்று.

மூன்றன் ஒற்று வகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வகர ஒற்றாய் முடியும்.

எ - டு : முவ்வாயிரம் என வரும்.

`முதனிலை' என்றதனான் , முதல் நீண்டு வகர ஒற்றுக்கெட்டு மூவாயிரம் என்றும் வரும்.

(60)