மொழி மரபு

4. எழுத்துக்களின் இயக்கம்

உயிர்மெய் என்னும் பெயர்

47.தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை.

இஃது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் - எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து , மெய்ம்மயக்கநிலை மானம் இல்லை - மெய்ம்மயக்க நிலையின் மயங்கிவருதல் குற்றம் இல்லை.

எ - டு: "வல்லெழுத் தியையின் டகார மாகும்" (புள்ளி மயங் -7) என வரும்.

இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின். இது வழுவமைதி நோக்கி மொழிமரபின் கண்ணதாயிற்று.

(14)