இஃது , என் நுதலிற்றோ வெனின் , உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. தேருங்காலை மொழிவயின் ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு - ஐகாரம் ஆராயுங்காலத்து மொழிக்கண் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு. எ - டு: இடையன் , மடையன் என வரும். தேருங்காலை என்றதனான் முதற்கண் சுருங்காதென்பது கொள்க இடன் என்றதனான் இக் குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. (24)
|