இதுவும் அது உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தோடு வருதல் இல்லை-வ என்னும் மெய்யெழுத்தோடு மொழி முதலில் வருதலில்லை. பிற உயிர்கள் வரும். எ - டு: வளை, வாளி, விளரி, வீடு, வெள்ளி, வேர், வையம், வௌவு எனவரும். (30)
|