மொழி மரபு

6. மொழிமுதல் எழுத்துக்கள்

எல்லா எழுத்தும் முதலாம் இடம்

66.முதலா ஏன தம்பெயர் முதலும்.

இஃது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதலா ஏன - மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும்-(அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம்.

முதலாயின மெய் கதநபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என இவை. முதலாகாத மெய் ஙகரமும், டகரமும், ணகரமும், ரகரமும், லகரமும், ழகரமும், ளகரமும், றகரமும், னகரமும் என இவை.

எ - டு: அவை தம் பெயர்க்கு முதலாமாறு- ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்நன்று என்றாற்போல ஒட்டிக்கொள்க.

இனி `ஏன ' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம்பெயர் கூறும்வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க.

கக்களைந்தார், தப்பெரிது, அக்குறிது, ஆவலிது என்றாற் போல ஒட்டிக்கொள்க.

(33)