இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. அ வழி - அவ்விடத்து, பன்னீர் உயிரும் தம் நிலை திரியா-பன்னிரண்டு உயிரெழுத்தும் தத்தம் நிலையில்திரியாவாய், மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் - மிடற்றின்கட் பிறந்த வளியான் ஒலிக்கும். 'தந்நிலை திரியா' என்றதனால், குற்றியலுகரம், குற்றியலிகரம் தந்நிலை திரியுமென்பது பெறப்பட்டது. (2)
|