இஃது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கும் ஓர் குறியிடுதல் நுதலிற்று1 னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் - னகரமாகிய இறுதியையுடைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப - மெய்யென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர். (9)
1. இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க்குந்தான் இடம் கொடுத்து அவற்றான் இயக்குந் தன்மையான் உடம்பாய் நிற்றலின். (நச்சி).
|