மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற் பெயர்க்கும் ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமன்று. எ-று. எ - டு: வந்தார் , வந்தீரே; சென்றார் , சென்றீரே என வரும்.அர் ஈற்றுத் தொழிற்பெயர் வந்தவழிக் கண்டுகொள்க. ஏகாரம் வருதலும் வழுக்கின்றென்றதனான் , ஏகாரம் பெறாது ஈரோடு சிவணலே பெரும்பான்மை யென்பதாம். (22) |