4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

லகர ளகர ஈறு

146வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆளென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

வினையின்கண்ணும் பண்பின்கண்ணும் வரும் ஆளீற்றுப்பெயர் , இயல்பாகாது , ஆயாய் விளியேற்கும் ; எ- று.

எ - டு: நின்றாள் , நின்றாய் எனவும் ; கரியாள் , கரியாய் எனவும் வரும்.

விளிவயினான என்பதனை முன்னும் பின்னுந் தகுவனவற்றோடு கூட்டுக.

(29)