மூவகையாக மேற்சொல்லப்பட்ட பெயருள், அவனென்பது முதலாக யாவரென்ப தீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப்பெயர் ; எ-று. யானென்பது, ஒருவன் ஒருத்தி யென்னும் பகுதி யுணர்த்தாதாயினும், அத்திணை யொருமை யுணர்த்தலின் பாலறிவந்த பெயராம். அல்லதூஉம், பாலறி வந்தவெனப் பன்மைபற்றிக் கூறினாரெனினுமமையும். (8) |