மேற்சொல்லப்பட்ட பெயர்போல்வன பிறவும், உயர்திணைக்கண் பன்மையும் ஒருமையுமாகிய பாலறிவந்த எல்லாப்பெயரும் உயர்திணைப் பெயராம் ; எ-று. 1 பாலறிவந்த என்னாது ஒருமைப்பாலுணர்த்துவனவும், அடங்குதற்குப் `பன்மையும் ஒருமையும் பாலறிவந்த' என்றார். அன்ன பிறவுமாவன - ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார், என்னுந் தொடக்கத்தன. (12)
1. முப்பாலறிவந்த எனவும் பாடம். |