5.பெயரியல்

அஃறிணைப் பெயர்கள்

புறனடை

170அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

மேற்கூறப்பட்ட பெயர்போல்வன பிறவும், அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்குரிய ; எ-று.

அன்னபிறவு மென்றதனாற் கொள்ளப்படுவன பிறிதுபிற; மற்றையது, மற்றையன, பல்லவை, சில்லவை; உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன.

(16)