5.பெயரியல்

விரவு பெயர்கள்

பெண்மை சுட்டிய பெயர்

180பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.
 

மேற்கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும் பற்றிப் பாலுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அவை பெண்மைப் பெயர் நான்கும், ஆண்மைப்பெயர் நான்கும், பன்மைப் பெயர் மூன்றும், ஒருமைப்பெயர் மூன்றுமாம்.

பெண்மை பற்றி வரும் நான்கு பெயரும்,அஃறிணைப் பெண் ணொன்றற்கும் உயர்திணை யொருத்திக்கும் உரிய ; எ-று.

அந் நான்குமாவன: பெண்மையியற்பெயரும், பெண்மைச்சினைப் பெயரும்,பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை முறைப் பெயருமேயாம்.

எ - டு: சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும்; முடகொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும்; அவை முறையானே அஃறிணைப் பெண்மைக்கும், உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. முடமென்பது சிணையது விகாரமாகலிற் சினையாயிற்று.

ஒன்றற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், பெண்மை சுட்டிய பெயரென்றமையான் அஃறிணைப் பெண்ணென்றேயாம். இஃது `ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்' (சொல்-181) என்புழியுமொக்கும்.

ஒன்றிய நிலையுடையவற்றை `ஒன்றிய நிலை' யென்றார்.

(26)