ஆண்மைபற்றி வரும் நான்கு பெயரும், அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை யொருவனுக்கும் உரிய ; எ-று. அந் நான்குமாவன: ஆண்மை யியற்பெயரும், ஆண்மைச்சினைப் பெயரும், ஆண்மைச் சினைமுதற்பெயரும், ஆண்மை முறைப்பெயருமேயாம். எ - டு:சாத்தான் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது,முடக்கொற்றன் வந்தான் எனவும்; தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணையாண் பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (27) |