5.பெயரியல்

விரவு பெயர்கள்

தாம் என்னும் பெயர்

184தாமென் கிளவி பன்மைக்கு உரித்தே.
 

தத்தமரபினவெனப்பட்ட பெயர் பாற்குரியவாய் வருமாறுணர்த்துகின்றார்.

தாமென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மைப்பாற்கு உரித்து ; எ-று.

எ - டு:தாம் வந்தார் , தாம் வந்தன என வரும்.

(30)