நீயிரென்னும் பெயர் பன்மைக்குரித்து ; எ-று. பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொது வாகிய பன்மை. எ - டு:நீயிர் வந்தீர் என வந்தவாறு கண்டு கொள்க. `எல்லாம் நீயிர் நீ'(சொல்-174) எனவோதியவாறன்றி, ஒருமை பன்மையென்னும் முறைபற்றி ஈண்டு நீ யென்பதனை முற்கூறினார். அன்றி, முந்துமொழிந்ததன் றலைதடுமாற்ற மென்னுந் தந்திரவுத்தி யெனினுமமையும். நீயிர் நீயென இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந்துணர்த்தா வாயினும், ஒருமை பன்மையென்னும் பொருள் வேறுபாடுடையவென வரையறைப்படுவழி, வரையறுத்தவாறு. (36) |