1.கிளவியாக்கம்

2.பால்

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் அமையும் வகை.

20செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.
 

காரணத்தால் தன்மை திரிந்த பொருளை, அத்திரிபு கூறுங்கால், ஆக்கங் கொடுத்துச் சொல்லுக; எ-று.

ஆக்கமொடு கூறல் என்பதனால் திரிபு கூறுதல் பெற்றாம்.என்னை?அதன்கணல்லது வாராமையின்1.

இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்பன , இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

(20)

1. "ஆக்கமொடு கூறல் ............வாராமையின்" - ஒரு பொருள் வளர்ச்சியடைவதும் திருந்துவதும் கெடுவதும் இன்னொரு பொருளாய் மாறுவதுமே ஆக்கமாம். அவ்வகை யாக்கமும் திரிபேயாதலின் , ஆக்கம் கூறவே திரிபும் உடன் கூறியவாறாம். ஆக்கத்தினாலன்றி வேறு வகையில் திரிபில்லை என்பது.