பொதுவகையாற் கூறியவினைச்சொல்லைச் சிறப்பு வகையானுணர்த்திய வெடுத்துக்கொண்டார். குறிப்புப் பொருண்மைக் கண்ணுந் தொழிற்பொருண்மைக்கண்ணுந் தோன்றிக்காலத்தோடு வரும் எல்லாவினைச் சொல்லும், உயர்திணைக்குரியனவும் அஃறிணைக்குரியனவனவும் இரண்டு திணைக்கும் ஒப்ப வுரியனவுமென, மூன்று கூற்றனவாம்; தோன்றுநெறீக்கண் ; எ-று. கரியன், செய்யன் வன்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலிற் குறிப்பென்றார். எ - டு:உண்டான், கரியன், சென்றது, செய்யது; வந்தனை, வெளியை என வரும். `குறிப்பொடுங்கொள்ளும்' (சொல்-200) என மேற் குறிப்பியைபு பட்டு நிற்றலிற் குறிப்பினும் வினையினும் என்றார். முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை இஃதிறந்த காலத்திற்குரித்து இது நிகழ்காலத்திற்குரித்து , இஃதெதிர்காலத்திற்குரித்து என வழக்கு நோக்கி, உணர்ந்து கொள்க வென்பது விளக்கிய, `காலமொடு வரூஉம்' என்றார். வினைச்சொற் காலமுணர்த்துங் காற்சிலநெறிப்பாடுடைய வென்பது விளக்கிய, `நெறிப்படத்தோன்றி' என்றார். நெறிப் பாடாவது அவ்வீற்றுமிசை நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றவுணர்த்தலாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச்சிறிய சொல்லுதும். (4) |